ரயிலில் ஹவலா பணம் கொண்டு வந்த பயணிகளை மிரட்டி பணம் பறித்த காவல் ஆய்வாளர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட்..!

0 2117

சென்னையை அடுத்த பெரம்பூரில் ரயிலில் ஹவாலா பணம் கொண்டு வந்த பயணிகளை மிரட்டி பணம் பறித்த புகாரின் அடிப்படையில் காவல் ஆய்வாளர் உள்பட 4 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். 

ரயிலில் 2 கோடி ரூபாய் ஹவாலா பணம் கொண்டு வந்த 4 பயணிகளின் விவரத்தை முறையாக விசாரித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் சொல்லாமல்,  வருமான வரித்துறையில் ஒப்படைப்போம் என, பயணிகளிடம் போலீசார் பேரம் பேசுவதாக தகவல் கிடைத்தது.

இதுதொடர்பாக ரயில்வே காவல் கண்காணிப்பாளர் விசாரணை மேற்கொண்டு,இன்ஸ்பெக்டர் முருகன்,  சப் இன்ஸ்பெக்டர் குமார், காவலர்கள் தினேஷ், சுதாகர் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.

இவர்கள் 4பேரும்  லோக்மானிய திலக் எக்ஸ்பிரஸ் ரயிலில் வந்திறங்கிய பயணியிடம் இந்த குற்றச் செயலில் ஈடுபட்டது விசாரணையில் தெரிய வந்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments