நாட்டிலேயே அதிகபட்ச உள்நாட்டு விமான சேவைகள் உ.பி யில் விரைவில் தொடங்கப்படும் - ஜோதிராதித்ய சிந்தியா

0 1267

நாட்டிலேயே அதிகபட்ச உள்நாட்டு விமான சேவைகள் உத்தரபிரதேச மாநிலத்தில் விரைவில் தொடங்கப்படும் என சிவில் விமான போக்குவரத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

லக்னோவில் நடைபெற்றுவரும் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்று பேசிய அவர், உத்தரபிரதேசம் முதலீட்டுக்கு சாதகமான இடமாக விளங்குவதாகவும், அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

உத்தரபிரதேசத்தில் 10 புதிய விமான நிலையங்கள் கட்டப்பட்டு வருவதாக தெரிவித்த சிந்தியா, வரும் நாட்களில் 21 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என்றும் கூறினார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments