ராமர் பாலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் திட்டத்தை எந்தக் காலத்திலும் கொண்டு வரக்கூடாது என்பதே பாஜகவின் நோக்கம்-அண்ணாமலை

0 2712

ராமர் பாலத்திற்கு தீங்கு ஏற்படுத்தும் திட்டத்தை எந்தக் காலத்திலும் கொண்டுவரக் கூடாது என்பதே சேது சமுத்திர திட்டத்தில் பாஜகவின் நிலைப்பாடு என தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

இலங்கை சென்றுள்ள அண்ணாமலை நல்லூரில் நடைபெற்ற கம்பன் கழக விழாவில் பங்கேற்றார். அதில் உரையாற்றிய அவர், 1983ஆம் ஆண்டிற்கு பிறகு நிறுத்தப்பட்ட இந்தியா - இலங்கை கப்பல் போக்குவரத்தை மீண்டும் தொடங்குவது குறித்து இலங்கை தூதரக அதிகாரிகளிடம் தலைமன்னாரில் ஆலோசித்ததாக குறிப்பிட்டார்.

மேலும், தமிழ்நாட்டிற்கும் இலங்கைக்குமான பிணைப்பு வரும் காலத்தில் மேலும் இறுக்கமாக இருக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments