துருக்கி நிலநடுக்கம்.. 5 நாட்களாக உணவு, தண்ணீரின்றி இடிபாடுகளில் சிக்கித் தவித்த சிறார்கள் உயிருடன் மீட்பு..!

0 1863

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட துருக்கியின் கஹ்ராமன்மாராஸ் நகரில், 5 நாட்களாக உணவு, தண்ணீரின்றி இடிபாடுகளுக்கு இடையில் கடுங்குளிரில் சிக்கித் தவித்த 2 சிறார்கள் உயிருடன் மீட்கப்பட்டனர்.

இடிபாடுகளுக்கு இடையில் அசைவுகள் ஏற்படுவதைக் கண்ட மீட்புக் குழுவினர், இடிபாடுகளில் துளையிட்டு, மனித சங்கிலியை ஏற்படுத்தி மீட்புப் பணிகளை முடுக்கிவிட்டனர்.

உள்ளே சிக்கியிருந்த சிறார்கள் மீட்கப்பட்டதும் வெளியே மருத்துவர்களுடன் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஆம்புலன்ஸுக்கு கொண்டு செல்லப்பட்டு, கிரீன் காரிடார் மூலம் விரைந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments