நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரிய அகதிகள் தனித்து விடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையம் தகவல்..!

0 1575

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள சிரிய அகதிகள் தனித்து விடப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் அகதிகள் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து அந்த ஆணையத்தின் செய்தித் தொடர்பாளர் ரூலா அமீன் பேசும் போது, நிலநடுக்கம் காரணமாக சுமார் ஒரு கோடி சிரிய மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.

கடந்த 2011ம் ஆண்டு முதல் நடந்து வரும் உள்நாட்டு போரினால் வீடுகளை இழந்தவர்களின் நிலை தற்போது மேலும் மோசமாகி விட்டதாக அவர் குறிப்பிட்டார்.

மீட்புப் பணியில் மட்டுமின்றி உணவு, மருத்துவத்திலும் அகதிகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை எனக் குற்றம் சாட்டிய அவர், பசியும், உறைபனியும் அகதிகளை மேலும் துன்புறுத்துவதாகக் குறிப்பிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments