வால்மீகி ஜெயந்தி விழாவிற்கு நடிகர் சுதீப் வராததால் ஆத்திரம்… நாற்காலிகளை உடைத்து ரசிகர்கள் ரகளை

0 1855

கர்நாடகத்தில் நடைபெற்ற வால்மீகி ஜெயந்தி விழாவில் நடிகர் சுதீப் பங்கேற்காததால் ஆத்திரமடைந்த ரசிகர்கள் நாற்காளிகளை உடைத்தனர்.

தாவண்கரே மாவட்டத்தில், முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தொடங்கிவைத்த வால்மீகி ஜெயந்தி விழாவில், நடிகர் சுதீப்  மாலை பங்கேற்பார் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

அவரை காண ஆயிரக்கணக்கான ரசிகர்கள் காத்திருந்த நிலையில், அவர் வரவில்லை என விழா மேடையில் அறிவிக்கப்பட்டதால் ஏமாற்றமடைந்த ரசிகர்கள் நாற்காலிகளை அடித்து உடைத்தனர். போலீசார் தடியடி நடத்தி அவர்களை அப்புறப்படுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments