இந்தோனேசியாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் பலி.. நிலநடுக்கத்தால் கடலுக்குள் இடிந்து விழுந்த உணவகம்!

0 1919

இந்தோனேஷியாவில் நேற்று ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 4 பேர் உயிரிழந்தனர்.

நிலநடுக்கத்தின் மையம் பப்புவா மாகாணத்தின் தலைநகரான ஜெயபுராவில் இருந்து 10 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 5.5 ஆக பதிவானதாகவும், இந்த நிலநடுக்கத்தின் போது ஜெயபுராவில் உணவகம் ஒன்று இடிந்து கடலுக்குள் விழுந்தது. இதில் உணவகத்தில் சாப்பிட்டுக் கொண்டிருந்த 4 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments