பேருந்துகளில் ஆபத்தான பயணம்.. மாணவர்கள் மீது போலீசில் புகாரளிக்கலாம் - போக்குவரத்துத்துறை

0 1819

பேருந்துகளில் ஓட்டுநர், நடத்துனரின் எச்சரிக்கையை மீறி ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது போலீசில் புகாரளிக்கலாம் என போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக மாநகர போக்குவரத்து கழக மேலாண் இயக்குநர் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், மாணவர்கள் படியில் தொங்க நேரிட்டாலோ அல்லது உயிருக்கு பாதுகாப்பற்ற முறையில் பயணிக்க முற்பட்டாலோ பேருந்தை நிறுத்தி முறையற்ற பயணத்தை தவிர்க்க அறிவுறுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஓட்டுநர்கள், நடத்துநர்களின் அறிவுரையை மாணவர்கள் கேட்காமல் கட்டுப்பாட்டை மீறினால் அவசர அழைப்பு எண்ணான 100 அல்லது மாநகர போக்குவரத்து கழகத்துக்கு தகவல் தெரிவித்து புகார் அளிக்கலாம் என்றும் மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்வது ஓட்டுநர், நடத்துநர்களின் பொறுப்பு என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments