நீதிமன்ற உத்தரவின்படி குழந்தைகளை ஒப்படைக்கக்கோரி பிரிந்து வாழும் மனைவி கணவர் வீட்டின் முன்பு தர்ணா!

0 1701

தூத்துக்குடியில், நீதிமன்ற உத்தரவின்படி குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க கோரி தாசில்தார் வீட்டு முன்பு அமர்ந்து அவரது மனைவி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

மடத்தூரைச் சேர்ந்த ஞானராஜ், குடிமை பொருள் வழங்கல் பிரிவு தாசில்தாராக பணியாற்றி வருகிறார். இவரும், இவரது மனைவி கிரேஸி விஜயா என்பவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

குழந்தைகள் இருவரும் தந்தை ஞானராஜ் பாதுகாப்பில் இருந்து வந்த நிலையில், குழந்தைகளை தன்னிடம் ஒப்படைக்க உத்தரவிடக் கோரி தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றத்தில் கிரேஸி விஜயா வழக்கு தொடர்ந்திருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதி, குழந்தைகள் இருவரையும் தாயிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments