கோயிலுக்கு சொந்தம் கொண்டாடிய இருதரப்பினர்.. பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாததால் சாலை மறியல் செய்த ஒருதரப்பினர் கைது

0 2251
விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கோயில் பிரச்சனையில் சாலை மறியல் செய்ய முயன்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்ததால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே கோயில் பிரச்சனையில் சாலை மறியல் செய்ய முயன்ற நூற்றுக்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்ததால், அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டது.

பாலவனத்தம் கிராமத்தில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலுக்கு இருதரப்பினர் சொந்தம் கொண்டாடிய நிலையில், ஐந்து மாதங்களாக கோயில் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அருப்புக்கோட்டை கோட்டாசியர் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சமாதானக் கூட்டத்தில் முடிவு எட்டப்படாததால், ஒரு தரப்பினர் நேற்றிரவு சாலை மறியலில் ஈடுபட்டனர்.

போலீசார் அவர்களை சமாதானப்படுத்தி கலைந்து போக செய்த நிலையில், இன்று காலை மீண்டும் போராட்டம் நடத்த முயற்சித்துள்ளனர். இதனையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments