இமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி இருவர் உயிரிழப்பு.. ஒருவரைத் தேடும் பணி தீவிரம்!

0 1299

இமாச்சல் பிரதேசத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி மாயமானவர்களை தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

லகுல் என்ற இடத்தில் நேற்று மாலை திடீரென ஏற்பட்ட நிலச்சரிவு காரணமாக அங்கு பணியில் இருந்த எல்லை சாலை அமைப்பைச் சேர்ந்த மூவர் மாயமானதாகக் கூறப்படுகிறது.

இதில் இருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளதாகவும், ஒருவரை தேடும் பணி தொடர்ந்து நடந்து வருவதாகவும் மாநில பேரிடர் மீட்புப் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

ஆனால் குறைந்த வெளிச்சம் மற்றும் அதிக குளிர் காரணமாக தேடும் பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments