தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை லேசான மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம்!

0 1678

குமரிக்கடலில் நேற்று நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வலுவிழந்து வருவதால், இன்று கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

நாளை, தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் ஓரிரு  இடங்களில் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னையை பொறுத்தவரை அடுத்த 2 நாட்களுக்கு வானம் ஓரளவிற்கு மேகமூட்டத்துடன் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தென்தமிழக கடலோரப்பகுதிகள் மற்றும் குமரிக்கடலில் மணிக்கு 55 கிலோ மீட்டர் வேகம் வரை சூறாவளிக்காற்று வீச வாய்ப்புள்ளதால்  இன்றும், நாளையும் மீனவர்கள் அங்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments