பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினம் அனுசரிப்பு..!

0 1517

பேரறிஞர் அண்ணாவின் 54வது நினைவு தினத்தையொட்டி, ஈரோடு கிழக்கு தொகுதியில் அமைக்கப்பட்டுள்ள அதிமுக தேர்தல் பனிமனையில், முன்னாள் அமைச்சர்கள் செங்கோட்டையன் , தங்கமணி ஆகியோர் அண்ணாவின் உருவபடத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

அண்ணா பிறந்த ஊரான காஞ்சிபுரத்தில் உள்ள அவரது நினைவு இல்லத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி மரியாதை செலுத்தினார்.

மதுரை, நெல்பேட்டை ரவுண்டானா அருகிலுள்ள் அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, அமைச்சர்கள் லட்சுமி நாராயணன், சந்திர பிரியங்கா ஆகியோர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். எதிர்கட்சித் தலைவர் சிவா தலைமையில் திமுக எம்.எல்.ஏகள் அண்ணா சிலைக்கு மரியாதை செலுத்தினர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments