ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான இன்ஜினில் புகை வந்ததால் அபுதாபியில் தரையிறக்கம்..!

0 1812

அபுதாபியில் இருந்து கோழிக்கோடு புறப்பட்ட ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தின் இன்ஜின் ஒன்றில் புகை வந்ததையடுத்து விமானம் மீண்டும் அபுதாபியில் தரையிறக்கப்பட்டது.

IX348 விமானம் 184 பயணிகளுடன் இன்று கோழிக்கோட்டிற்கு புறப்பட்டது. ஆயிரம் அடி உயரத்தில் சென்றபோது விமானத்தின் என்ஜின் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு புகை வந்தது.

இதனையடுத்து விமானம் பாதுகாப்பாக அபுதாபி விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டதாகவும், பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உள்ளதாகவும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments