நோயாளிகள் போல் நடித்து மருத்துவரிடம் திருட்டு.. துப்பாக்கி முனையில் 4 பேரை கைது செய்த போலீசார்!

0 1964

சென்னை சோழிங்கநல்லூரில் மருத்துவரை கத்தரிக்கோலால் குத்தி பணத்தைப் பறித்து சென்ற கொள்ளையர்களை போலீசார் கைது செய்தனர்.

சம்பவத்தன்று, மருத்துவர் சதீஷ் என்பவரின் கிளினிக்கிற்குள் நுழைந்த 4 பேர், மருத்துவம் பார்ப்பது போல் நடித்து, அங்கிருந்த கத்திரிக்கோலை எடுத்து அவரின் கழுத்தில் குத்தி விட்டு பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துக் கொண்டதுடன், போலீசில் சிக்காமலிருக்க சிசிடிவியையும் சேதப்படுத்திவிட்டு தப்பிச் சென்றது.

இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் விரட்டி சென்று பிரகாஷ் என்பவனை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். அவன் அளித்த தகவலின் பேரில் நீலாங்கரையில் பதுங்கிருந்த மற்ற 3 பேரையும் துப்பாக்கி முனையில் போலீசார் கைது செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments