தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட ரூ.1000 பொங்கல் பரிசுத்தொகையை 4.40 லட்சம் பேர் பெறவில்லை..!

0 2056

தமிழ்நாட்டில் வழங்கப்பட்ட 1000 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகையை 4 லட்சத்து 40 ஆயிரம் பேர் வாங்கவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.

பொங்கல் பண்டிகையையொட்டி  தகுதியுள்ள 2 கோடியே 18 லட்சத்து 86 ஆயிரத்து 123 குடும்ப அட்டைதாரர்களுக்கு, ஆயிரம் ரூபாய் ரொக்கத்துடன் கூடிய, பச்சரிசி, கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்தது. 

ஏராளமானோர் பொங்கல் தொகுப்பை பெற்ற நிலையில், பெங்கல் பரிசை பெறாத 4 லட்சத்து 39 ஆயிரத்து 669 பேருக்கு ஒதுக்கப்பட்ட, 43 கோடியே 96 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் பணம் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், அதை அதிகாரிகள் அரசு கருவூலத்தில் செலுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments