தமிழக மீனவர்களின் விசைப்படகுகளை சிறைப்பிடித்த இலங்கை அரசு

0 1137

ராமநாதபுரம் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள்  மீன்பிடிக்க சென்ற 17 மீன்பிடி படகுகள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டன.

இந்த படகுகள் மீதான விசாரணை யாழ்ப்பாணம் ஊர்க்காவல்துறை நீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

நேற்று நடந்த இந்த விசாரணையின் போது, தமிழக மீனவர்களின் 3 விசைப்படகுகளை நாட்டுடைமை ஆக்குவதாகவும், மீதமுள்ள படகுகளின் மீதான விசாரணை விரைவில் நடைபெறும் எனவும் நீதிபதி தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments