"பொன்னி நதி பாக்கணுமே".. மீண்டும் திறக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலம்.. அடுத்தடுத்து கடந்த 3 கப்பல்கள்.. பாட்டுப்பாடி ரசித்த மக்கள்...

0 2451

45 நாட்களுக்கு பின் திறக்கப்பட்ட பாம்பன் தூக்கு பாலம் வழியாக அடுத்தடுத்து 3 கப்பல்கள் கடந்துச் சென்றதை மக்கள் கண்டு ரசித்தனர்.

பாம்பன் தூக்கு பாலத்தில் பொருத்தப்பட்டுள்ள சென்சார்களில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, பாலம் வழியாக ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டு பராமரிப்பு பணி நடைபெறுகிறது. இந்நிலையில், 2 நாட்களுக்கு முன்பு வந்த கப்பல்கள் பாலத்தை கடந்துச் செல்ல காத்திருந்தன.

எனவே, இன்று காலை பாலம் திறக்கப்பட்டதும், பைலட் கப்பல் ஒன்றும் கேரளா, கோவா செல்லும் கப்பல்களும் அடுத்தடுத்து கடந்துச் சென்றன. இதனைக் காண வந்திருந்த கேரள இளைஞர்கள், பொன்னி நதி பாடலை பாடி, உற்சாகமடைந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments