சிரியாவில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து.. 16 பேர் பலி!

0 1818

சிரியாவில் போரில் சேதமடைந்த அலெப்போ பகுதியில் 5 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்ததில், இடிபாடிகளில் சிக்கி 16 பேர் உயிரிழந்தனர்.

ஷேக் மக்சூத் மாவட்டத்தில் உள்ள குடியிருப்பு கட்டிடம் திடீரென நேற்று இடிந்து விழுந்தது. தகவலறிந்து வந்த மீட்புப் படையினர், இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும், பலர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கட்டடத்திற்கு அடியில் ஏற்பட்ட நீர்க்கசிவு காரணமாக பலவீனமாகி கட்டிடம் இடிந்து விழுந்திருக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments