மின்வாரிய ஊழியர்கள் கூறியதால், மின் கம்பத்திலேறி பழுதுபார்த்த ITI மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழப்பு..!

0 2097

தென்காசி மாவட்டம் ஆயிரப்பேரி கிராமத்தில், மின்வாரிய ஊழியர்கள் கூறியதால், மின் கம்பத்திலேறி பழுதுபார்த்த ITI மாணவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர்.

தென்னந்தோப்பில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டதால், மின்வாரிய ஊழியர்கள், இரண்டாமாண்டு ITI மாணவரான நாகராஜை மின் கம்பத்திலேறி பழுதுபார்க்க சொன்னபோது அவர் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.

ஞாயிற்றுகிழமை, மது போதையிலிருந்த மின்வாரிய ஊழியர்கள், பாதுகாப்பு உபகரணங்கள் ஏதுமின்றி நாகராஜை மின்கம்பத்திலேறி பழுது பார்க்க சொன்னதாக உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments