கந்து வட்டி பிரச்னையில் திருமணமான ஒரு வருடத்தில் இளைஞர் அடித்துக் கொலை!

0 2720

சென்னையில் கந்து வட்டிப் பிரச்னையில் தாக்கப்பட்ட இளைஞர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

துரைப்பாக்கம் பகுதியில் இறைச்சிக் கடை நடத்தி வந்த ஏஜாஸ் என்பவருக்கு கடந்த ஒரு ஆண்டுக்கு முன் திருமணம் நடந்தது. இதற்காக தனது நண்பர் ஸ்ரீதரன் என்பவரிடம் 40 ஆயிரம் ரூபாய் கந்து வட்டிக்கு வாங்கியதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் கடந்த மாட்டுப் பொங்கலன்று பண விஷயத்தில் ஏஜாஸை, ஸ்ரீதரன் தாக்கியதில் ஏஜாஸூக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனையடுத்து துரைப்பாக்கம் போலீசார் ஸ்ரீதரனை கைது செய்துள்ளனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments