மக்களைத் தேடி மருத்துவத் திட்டத்தில் குளறுபடி உள்ளதாக இபிஎஸ் குற்றச்சாட்டு

0 1812

மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தில் கீழ் பெரும்பாலான நோயாளிகளுக்கு தொடர்ந்து மருந்துப் பொருட்கள் வழங்கப்படுவதில்லை என்று அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டிள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், என்னென்ன நோய்க்கு எந்த வகையான மருந்துகள் வாங்கப்பட்டுள்ளன என்பதற்கான புள்ளிவிவரம் இல்லை என்றும், ஒரே விவரம் மீண்டும் மீண்டும் பதிவு செய்யப்பட்டதால் ஒருகோடி பேருக்கு மேல் பயன் பெற்றதாக கணக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த திட்டத்திற்காக இதுவரை செலவு செய்யப்பட்ட தொகை மற்றும் ஒரு கோடி பயனாளிகளின் முழு விவரங்களையும் அரசு வெளியிட வேண்டும் என்றும் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments