நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் 2 பேர் கொலை.. இளைஞர் கைது - போலீஸ் தீவிர விசாரணை!

0 2213

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே நிலப்பிரச்சினை தொடர்பாக ஏற்பட்ட சண்டையில் 2 பேர் கொலை செய்யப்பட்டனர்.

வாசுதேவநல்லூரைச் சேர்ந்த ஐயப்பன் மற்றும் செல்லதுரை ஆகியோர் நிலப்பிரச்னை தொடர்பாக அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று இருவரும் வழக்கம் போல் வாய்த்தகராறில் ஈடுபட்டு பின்னர் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்குதல் நடத்திக் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது ஐயப்பன் என்பவரை செல்லத்துரை அரிவாளால் வெட்டியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் ஆத்திரம் அடைந்த ஐயப்பன் மகன் கருப்பசாமி பழிக்குப்பழியாக செல்லத்துரையை கத்தியால் குத்திக்கொலை செய்ததாக கூறப்படுகிறது. தகவல் அறிந்த போலீசார் கருப்பசாமியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments