கர்நாடகா, மகாராஷ்ட்ராவில் 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி

0 1860

கர்நாடகா, மகாராஷ்ட்ரா ஆகிய மாநிலங்களில் 48 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டப் பணிகளுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார்.

கர்நாடகாவின் யாத்கீர், கல்புருகி ஆகிய மாவட்டங்களில் பாசனம் மற்றும் குடிநீர்த் திட்டங்களை அவர் தொடங்கி வைக்கிறார். சூரத் -சென்னை இடையிலான கிரீன்பீல்டு அதிவிரைவுச் சாலை திட்டத்தில், 71 கிலோ மீட்டர் தூரத்திற்கான பணிகளுக்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

மும்பை செல்லும் மோடி அங்கு 38 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களைத் தொடங்கி வைக்கிறார். பிரதமரின் வருகையை முன்னிட்டு மும்பையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments