பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் ரகுமான் மக்கி சர்வதேச தீவிரவாதி என ஐநா.பாதுகாப்பு கவுன்சில் அறிவிப்பு!

0 1600

பாகிஸ்தானைச் சேர்ந்த அப்துல் ரகுமான் மக்கி என்பவனை ஐநா.பாதுகாப்பு கவுன்சில் சர்வதேச தீவிரவாதி என்று அறிவித்துள்ளது.

அவருடைய வங்கிக் கணக்குகளை முடக்கவும், பயணங்களுக்குத் தடை விதிக்கவும் இந்தத் தடை உதவும். லஷ்கர் இ தொய்பா தலைவன் ஹபீஸ் சையத்தின் மைத்துனரான இவன்மீது தீவிரவாதத்துக்கு நிதித் திரட்டியது, இளைஞர்களை வன்முறைக்கு மூளைச் சலவை செய்து பயிற்சி அளித்தது இந்தியாவுக்கு எதிராக தாக்குதல்களைத் திட்டமிட்டது போன்ற பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.

ஐநா.பாதுகாப்பு கவுன்சிலின் நடவடிக்கைக்கு இந்தியா வரவேற்பு தெரிவித்துள்ளது. இந்தியாவின் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போட நினைத்த நிலையில் கடும் எதிர்ப்பைத் தொடர்ந்து பின்வாங்கியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments