இந்தியாவுடன் உண்மையான பேச்சுவார்த்தை நடத்த பாக். பிரதமர் விருப்பம்..!

0 1685

இந்தியாவுடன் நடத்திய 3 போர்களால் துன்பம், வறுமை மற்றும் வேலையின்மை ஆகியவற்றை மட்டுமே பாகிஸ்தான் பெற்றிருப்பதாலும், அதிலிருந்து கற்றுக் கொண்ட பாடத்தாலும் இந்தியாவுடன் உண்மையான பேச்சுவார்த்தை நடத்த விரும்புவதாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

துபாயின் அரபி சேனலுக்கு ஷெபாஸ் ஷெரீப் அளித்த பேட்டியில், காஷ்மீர் உள்ளிட்ட பிரச்சனைகளுக்கு பிரதமர் மோடியுடன் அமர்ந்து நேர்மையான முறையில் பேச்சுவார்த்தை நடத்துவதே தீர்வாக இருக்கும் என்று கூறினார்.

மேலும், அண்டை நாடான இந்தியாவுடன் எங்களின் உண்மையான பிரச்சனைகளை தீர்த்து, இந்தியாவுடன் நிம்மதியாக வாழ விரும்புகிறோம் என்றும் ஷெபாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments