பிரதமர் மோடி எழுதிய 'Exam Warriors' என்ற புத்தகத்தின் தமிழாக்கத்தை வெளியிட்ட ஆளுநர் ஆர்.என்.ரவி

0 2279

பிரதமர் மோடி எழுதிய Exam Warriors புத்தகம் தேர்வை மட்டுமல்ல, வாழ்க்கையையும் எப்படி எதிர்கொள்வது என்பதற்கு உதவும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி கூறியுள்ளார்.

சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் புத்தகத்தின் தமிழாக்கத்தை வெளியிட்டு ஆளுநர் பேசினார். பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் இந்தியா முன்னேறி உள்ளதாகவும், மாணவர்கள் மற்றும் இளைஞர்களால் தான் இந்தியா ஆளப்படுகிறது என்றும் கூறினார்.

ஒரு இளம் பெண் அல்லது ஆண் வாழ்வில் முன்னேறாமல் இருப்பது அவர்களின் இழப்பு மட்டுமல்ல நாட்டின் இழப்பு என்றும் ஆளுநர் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments