நாட்டுவெடி தயாரித்தபோது எதிர்பாராமல் வெடித்து ஒருவர் பலி.. வெடி தயாரிக்கும் மருந்து பொருட்கள், துப்பாக்கி பறிமுதல்..!

0 1244
நாட்டுவெடி தயாரித்தபோது எதிர்பாராமல் வெடித்து ஒருவர் பலி.. வெடி தயாரிக்கும் மருந்து பொருட்கள், துப்பாக்கி பறிமுதல்..!

ராணிப்பேட்டை மாவட்டம், ஆற்காடு கிளைபஜார் பகுதியில், பன்றி பிடிப்பதற்காக நாட்டு வெடி தயார் செய்தபோது, எதிர்பாராதவிதமாக வெடித்ததில், தந்தை உயிரிழந்த நிலையில், மகன் பலத்த காயமடைந்தார்.

நரிக்குறவர் சமூகத்தை சேர்ந்த முருகன், வீட்டில் நாட்டு வெடி தயாரித்ததாக கூறப்படும் நிலையில், அருகில் அவரது மகன் பகவதியும் இருந்துள்ளார். விபத்தில் நடந்த இடத்திலேயே முருகன் உயிரிழந்த நிலையில், பலத்த காயமடைந்த பகவதிக்கு ஆற்காடு அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு, மேல்சிகிச்சைக்காக, வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

தகவல் அறிந்து வந்த ராணிப்பேட்டை காவல்துறை துணை கண்காணிப்பாளர் பிரபு தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முருகனின் வீட்டிலிருந்து நாட்டு வெடி தயாரிக்கும் மருந்து பொருட்கள் மற்றும் நரிக்குறவர்கள் பயன்படுத்தும் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments