இரவு-பகலாக அனுமதியின்றி மணல் கொள்ளையில் ஈடுபடும் லாரிகளை சிறை பிடித்த இளைஞர்கள்.!

0 1732

திருவண்ணாமலை அடுத்த பேராயம்பட்டு கிராமத்தில் உரிய அனுமதியின்றி ஏரி மற்றும் வனப்பகுதியிலிருந்து மண் எடுப்பதாகக் கூறி ஜேசிபி இயந்திரம், லாரி, டிராக்டரை இளைஞர்கள் சிறை பிடித்தனர்.

கல்யாணகுண்டு, கோட்டைமலை, தென்கரும்பலூர் பகுதிகளில் கடந்த சில மாதங்களாக இரவு பகலாக மண் எடுப்பது குறித்து வாணாபுரம் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால், களத்தில் இறங்கிய உள்ளூர் இளைஞர்கள் வீடியோ பதிவு செய்து அதனை சமூகவலைத்தளத்தில் வெளியிட்டனர்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments