கள்ளக்குறிச்சியில் பத்திரப்பதிவு சார்பதிவாளர் பணியிடை நீக்கம்..!

0 2036

கள்ளக்குறிச்சியில், துணை ஆட்சியருக்கு சொந்தமான பொதுப்பணித்துறை அரசு பங்களா-வை தனிநபர் பெயரில் பத்திரப்பதிவு செய்ததாக சார்பதிவாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

கடந்த மாதம் கள்ளக்குறிச்சி சார்பதிவாளர் அலுவலகத்தில் விற்பனையான சொத்து மதிப்பில் சந்தேகம் எழுந்ததால், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்த அதிகாரிகள் பத்திரத்தில் குறிப்பிடப்பட்ட அந்த சொத்து பொதுப்பணித்துறைக்கு சொந்தமான துணை ஆட்சியர் பங்களா என்பதை கண்டுபிடித்தனர்.

இதையடுத்து, துணை ஆட்சியர் பங்களாவை தனி நபருக்கு பத்திரப்பதிவு செய்த சார் பதிவாளர் கதிரவனை பணியிடை நீக்கம் செய்து, பதிவுத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments