ஆளுநரை வைத்துக் கொண்டு முதலமைச்சர் பேசுவது பேரவை மரபுக்கு எதிரானது - இபிஎஸ்

0 2608

புதிய, பெரிய திட்டங்கள் எதுவும் இடம் பெறாத, ஏமாற்றம் மட்டுமே மிஞ்சும் வெற்று உரையாக ஆளுநர் உரை உள்ளதாக அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

சட்டப்பேரவை கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி இவ்வாறு தெரிவித்தார்.

ஆட்சியில் இருப்பவர்கள் தற்புகழ்ச்சியோடு தங்கள் முதுகுகளை தாங்களே தட்டிக் கொள்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் சற்று வித்தியாசமாக தமிழக உரையின் மூலம் தங்களின் முதுகை தட்டி சபாஷ் போட்டுக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.

அரசு தயாரித்து அனுப்பிய உரைக்கு ஆளுநர் அனுமதி கொடுத்தாரா இல்லையா என்பது தங்களுக்கு தெரியாது என்றும், பேரவையில் ஆளுநரை வைத்துக் கொண்டு முதலமைச்சர் பேசுவது என்பது மரபுக்கு எதிரானது மற்றும் அநாரிகமானது என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

மேலும், தமிழகத்தை பொறுத்தவரை சட்டம் ஒழுங்கு அடியோடு சீரழிந்துவிட்டதாகவும், கொலை, கொள்ளை வழிப்பறியுடன், போதைப் பொருட்களும் தங்குதடையில்லாமல் கிடைப்பதாக குற்றம் சாட்டினார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments