தீவுத்திடலில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!

0 1432

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில், அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் பணத்துடன் கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை சென்னை, தீவுத்திடல் நியாய விலைக்கடையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

ஆயிரம் ரூபாய் பணம், பச்சரிசி, சர்க்கரை தலா ஒரு கிலோ, 6 அடி நீளத்தில் தோகையுடன் கூடிய முழு செங்கரும்பு ஒன்று மற்றும் வேட்டி, சேலை கொண்ட பரிசுத் தொகுப்பை பத்திற்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு வழங்கி முதலமைச்சர் தொடங்கி வைத்தார்.

டோக்கன் பெற்றவர்கள் 12ஆம் தேதி வரையும், டோக்கன் பெறாதவர்கள் 13ஆம் தேதி அன்றும் நியாயவிலைக் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments