லாரி ஓட்டுநர் துண்டு துண்டாக வெட்டிக்கொலை.. கொலைக்கான காரணம் குறித்து போலீஸ் விசாரணை..!

0 1839

சேலம் மாவட்டம் தாரமங்கலம் அருகே, லாரி ஓட்டுநர் துண்டு துண்டாக வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிணற்றில் வீசப்பட்டார்.

சீரங்கனூர் மாட்டுக்காரன் வளவு பகுதியைச் சேர்ந்த மணி நேற்று காலையில் அரிசி வாங்கி விட்டு வருவதாக கூறி, தாரமங்கலம் சென்றதாக கூறப்படுகிறது.

அரிசி வாங்கி விட்டதாக மனைவிக்கு செல்போனில் தகவல் தெரிவித்த நிலையில், வீடு திரும்பவில்லை.

இந்நிலையில், அருகிலுள்ள கருக்குப்பட்டியில் விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் மணியின் துண்டிக்கப்பட்ட தலை மற்றும் உடலின் ஒருபகுதியை தாரமங்கலம் போலீஸார் ஞாயிறன்று கண்டெடுத்தனர்.

இரண்டு கைகள் மற்றும் இடுப்புக்கு கீழ் உள்ள பாகங்களை தேடி வரும் போலீஸார், கொலைக்கான காரணம் குறித்தும் விசாரித்து வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments