விருகம்பாக்கத்தில் பட்டப்பகலில் வீடு புகுந்து கொள்ளை.. வீட்டின் உரிமையாளர் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி தப்பிய திருடன்!

0 2505

சென்னை விருகம்பாக்கத்தில் வழக்கறிஞர் வீட்டின் பூட்டை உடைத்து 3 சவரன் நகை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் பணத்தை திருடிச் சென்ற நபரை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

விருகம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் முருகன் - சரோஜா தம்பதியினர். ((திமுக நிர்வாகியான ))முருகன் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணி புரிந்து வருகிறார்.

நேற்று அவர் பணிக்கு சென்றிருந்த நிலையில், சரோஜா பள்ளியில் இருந்து தனது மகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பிய போது, வீட்டின் கதவின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்த போது அறையில் மறைந்திருந்த மர்ம நபர் ஒருவர் சரோஜாவின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி விட்டு அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார்.

திருடன் தப்பியோடிய நிலையில், வீட்டில் நகை பணம் திருடு போனதை அறிந்த சரோஜா இது குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments