நடுங்க வைக்கும் குளிர் - டெல்லிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை

0 1701

இமாச்சலப்பிரதேசத்தை விட அதிக குளிர் நிலவும் என்பதால் டெல்லிக்கு இன்று ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவி வருகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை மட்டுமின்றி ரயில், விமானப் போக்குவரத்திலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், டெல்லி உட்பட வட இந்தியாவின் சில பகுதிகளுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையை இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ளது. குளிர் காரணமாக விவசாயம், கால்நடைகள், நீர் வழங்கல், போக்குவரத்து மற்றும் மின்துறை ஆகியவற்றில் பாதிப்பு ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments