4 மாதங்களுக்கு முன் பெண் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் குழந்தையின் தாய் கைது

0 2900

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே 4 மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை கடத்தப்பட்ட வழக்கில் அதன் தாய் கைது செய்யப்பட்டார்.

மங்கம்மாள்புரத்தைச் சேர்ந்த ஜானகி என்பவருக்கு பிறந்து 10 நாட்களே ஆன பெண் குழந்தை கடந்த ஆண்டு செப்டம்பரில் கடத்தப்பட்டதாக புகார் கூறப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ் வழக்கறிஞர் பிரபு மற்றும் அவரது 2வது  மனைவி சண்முகவள்ளி ஆகியோர் தலைமறைவாக இருந்து வருகின்றனர்.

இந்நிலையில் குழந்தையின் தாய் ஜானகியை கைது செய்த போலீசார் குழந்தை விற்பனைக்காக கடத்தப்பட்டதா அல்லது நரபலிக்காக கடத்தப்பட்டதா என விசாரணை நடத்தி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments