முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 இளைஞர்கள் கைது..!
தேனி பெரியகுளம் அருகே, முன்விரோதம் காரணமாக இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில், 4 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
கெங்குவார்பட்டியைச் சேர்ந்த நண்பர்களான வினோத் மற்றும் ஜெகதீஸ்வரன் ஆகிய இருவர், கடந்த 3ம் தேதி இரவு தென்னந்தோப்பில் மது அருந்திக் கொண்டிருந்த போது, அங்கு வந்த 10பேர் கொண்ட கும்பல் இருவரையும் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியது.
இதில் ஜெகதீஸ்வரன் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், வினோத் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவத்தில் தொடர்புடைய செல்வம், சதீஷ், விக்னேஷ், ராஜபாண்டி ஆகிய 4 பேரை கைது செய்து போலீசார் விசாரித்ததில், முன்விரோதத்தால் கொலை நடந்தது தெரியவந்தது.
முக்கிய கொலையாளிகளை போலீசார் தேடி வரும் நிலையில் கொலை சம்பவத்தால் கொங்குவார்ப்பட்டியில் இரு பிரிவினரிடையே மோதல் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளதால், 3ம் நாளாக அங்கு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
Comments