அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி, வாடிவாசல் அருகே முகூர்த்தக்கால் நட்டு வைத்தார் அமைச்சர் மூர்த்தி..!

0 1648

உலகப்புகழ்பெற்ற மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், இன்று முகூர்த்தக்கால் நடப்பட்டது.

நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சர் மூர்த்தி, முத்தாலம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின், அலங்கநல்லூர் வாடிவாசல் அருகே மூகூர்த்தக்கால் நட்டு வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்கான முன்பதிவு ஆன்லைன் மூலமாக நடைபெறும் என்றும் போட்டியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என்றும் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments