குற்றாலத்தில் கெட்டுப் போன சுமார் 400 கிலோ பேரீச்சம் பழங்கள் பினாயில் ஊற்றி அழிப்பு..!

0 2405

தென்காசி மாவட்டம் குற்றாலத்தில் கெட்டுப் போன சுமார் 400கிலோ பேரீச்சம் பழங்கள் பினாயில் ஊற்றி அழிக்கப்பட்டன.

வடக்கு சன்னதி பஜாரில்TSA என்ற பழக்கடையில் கெட்டுப் போன பேரிச்சம்பழங்கள் தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதாக பொதுமக்களிடமிருந்து புகார்கள் வந்த வண்ணம் இருந்தன.

உணவுப் பாதுகாப்பு அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது, கடையில் கெட்டுப்போன துர்நாற்றம் வீசும் பேரிச்சம் பழங்கள் இருந்ததைக் கண்ட அதிகாரிகள் அவற்றை பறிமுதல் செய்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments