சட்டவிரோத சுரங்கங்களைக் கண்காணிக்கச் காவல்துறையினர் மீது பொதுமக்கள் கல்வீசித் தாக்குதல்..!

0 1523

ராஜஸ்தானில் சட்டவிரோதமாகச் செயல்படும் சுரங்கங்களைக் கண்காணிக்கச் சென்ற காவல்துறையினர் மீதும் வனத்துறை வாகனங்கள் மீதும் பொதுமக்கள் கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

தோல்பூர் பகுதியில் உள்ள ராஜபுரா என்ற கிராமத்தில் சட்டவிரோதமாக சுரங்கங்கள் செயல்படுவதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து சிறப்பு புலனாய்வு குழுவினரும், வனத்துறை அதிகாரிகளும் திடீரென அங்கு சோதனை நடத்தச் சென்றனர். 

இதனையறிந்த அப்பகுதி மக்கள் வாகனங்கள் மீது கல்வீசித் தாக்குதல் நடத்தினர்.

இதில் வனத்துறை வாகனங்கள் சேதமடைந்தன. இதுகுறித்து தகவலறிந்த சென்ற காவல்துறையினருடன் பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments