பாகிஸ்தானில் இருந்து செயல்படும் தி ரெஸிஸ்டன்ட் ஃப்ரன்ட் அமைப்புக்கு மத்திய அரசு தடை..!

0 1827

பாகிஸ்தானில் இருந்து செயல்படும் லஷ்கர் இ தொய்பா அமைப்பின் துணை அமைப்பான தி ரெஸிஸ்டன்ட் ஃப்ரன்ட் (The Resistance Front) இயக்கத்திற்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சம் விடுத்துள்ள அறிக்கையில், ரெஸிஸ்டன்ட் ஃப்ரன்ட் அமைப்பின் செயல்பாடுகள் இந்தியாவின் தேசிய பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு தீங்கு விளைவிப்பதாக இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

(மேலும் இந்த அமைப்பு பயங்கரவாத நடவடிக்கைகள், தீவிரவாத இயக்கங்களுக்கு ஆட்சேர்ப்பு, எல்லையில் ஊடுருவல், பாகிஸ்தானில் இருந்து ஜம்மு-காஷ்மீருக்கு ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் போன்றவற்றில் ஈடுபட்டு வந்ததாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.)

இதனைத் தொடர்ந்து தி ரெஸிஸ்டன்ட் ஃப்ரன்ட் மற்றும் அதன் துணை அமைப்புகளை பயங்கரவாத இயக்கமாக அறிவிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments