ஈரோடு கிழக்கு தொகுதி காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா காலமானார்

0 4873

முன்னாள் மத்திய அமைச்சர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகனும், ஈரோடு கிழக்கு சட்டமன்றத்தொகுதி எம்.எல்.ஏ-வுமான, திருமகன் ஈவெரா, மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.

கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில், போட்டியிட்டு திருமகன் வெற்றி பெற்றார். சில நாட்களுக்கு முன், உடல்நலக்குறைவு காரணமாக, ஈரோட்டில் உள்ள கே.எம்.சி.ஹெச் தனியார் மருத்துவமனையில் திருமகன் ஈவெரா சிகிச்சை பெற்றுவந்தார்.

இன்று அதிகாலை, அவருக்கு மாரடைப்பு ஏற்பட்ட நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் உயிரிழந்தார். திருமகன் ஈவெராவின் இறுதி ஊர்வலம், நாளை மாலை 3 மணியளவில், ஈரோடு கச்சா வீதியில் உள்ள இல்லத்திலிருந்து புறப்பட்டு,
காவேரி கரை ஆத்மாவில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments