வடமாநில தொழிலாளி ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக, பீகாரைச் சேர்ந்த 4 பேர் கைது..!

0 1570

கடலூர் அருகே வடமாநில தொழிலாளி ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டது தொடர்பாக, பீகாரைச் சேர்ந்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடிகாடு பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில், ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வந்த வடமாநில தொழிலாளர்களில் சிலர்,
நேற்று பணி முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தனர்.

அப்போது, மர்மக்கும்பல் ஒன்று அவர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு, தப்பியோடிய நிலையில், பீகாரை சேர்ந்த சஞ்சய் குமார் என்பவர் தாக்குதலில் உயிரிழந்தார்.

இதுதொடர்பாக 4 பேரை போலீசார் கைது செய்த நிலையில், தொழிற்சாலையில் கண்காணிப்பாளராக பணியாற்றிய சஞ்சய் குமார், அதிக வேலை வழங்கியதால், தகராறு ஏற்பட்டு அதன் காரணமாக கொலை நிகழ்ந்ததாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments