புதிதாய்ப் பிறந்தது 2023 புத்தாண்டு.. உற்சாகத்துடன் பல்வேறு இடங்களில் கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மக்கள்..!

0 1364

புத்தாண்டு பிறப்பையொட்டி வழக்கமான உற்சாகத்துடன் பல்வேறு இடங்களில் மக்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். 

புது வருடம் பிறந்ததையொட்டி பல்வேறு இடங்களில் பெரும் திரளாக கூடிய மக்கள் நள்ளிரவில் உற்சாகமாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

'ஹேப்பி நியூ இயர்' என விண்ணதிர உற்சாக முழக்கத்துடன் ஒருவருக்கு ஒருவர் புத்தாண்டு வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர்

சென்னை மெரினா கடற்கரை பகுதியில் புத்தாண்டையொட்டி கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தது. எனினும், மணிக்கூண்டு அருகே ஏராளமானோர் திரண்டு புத்தாண்டை உற்சாகமாக கொண்டாடினர்.

கோவை, திருச்சி, மதுரை, சேலம் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் புத்தாண்டை ஆரவாரத்துடன் வரவேற்ற மக்கள், வாணவேடிக்கைகளைக் கண்டு ரசித்தனர்.

பல்வேறு இடங்களில் தனியார் விடுதிகள், ரிசார்ட்டுகள் உள்ளிட்ட இடங்களில் இளைஞர்களும், இளம்பெண்களும் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுச்சேரி கடற்கரையில் ஆயிரக்கணக்கில் திரண்ட மக்கள் ஆட்டம் பாட்டத்துடன் புது வருட பிறப்பை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர்...

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments