புத்தாண்டு கொண்டாட்டம் - மும்பையில் பலத்த பாதுகாப்பு..!

0 1959

நாடு முழுவதும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் களைகட்ட தொடங்கியுள்ள நிலையில், மும்பை போன்ற பெருநகரங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

மும்பை கேட்வே ஆப் இந்தியா பகுதியில் புத்தாண்டைக் கொண்டாட மக்கள் திரள்வார்கள் என்பதால், காவல்துறையினர் சட்டம்-ஒழுங்கை பாதுகாக்க பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின்போது. கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகளை குறித்த வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன. இன்று பிற்பகல் 2 மணி முதல் நாளை அதிகாலை வரை பாதுகாப்பு காரணத்துக்காக படகுகள் போக்குவரத்து நிறுத்தப்படும் என, காவல்துறையினர் தெரிவித்தனர்.

மும்பை நகரில் 5 ஆயிரம் போலீசார் பாதுகாப்புக்காக ரோந்துப்பணி மேற்கொண்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments