காரில் சாவகாசமாக வலம் வந்து அடுத்தடுத்து 5 வீடுகளில் டார்ச் அடித்து பார்த்து கொள்ளை..!

0 2626

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தில் 5 வீடுகளில் டார்ச் அடித்து பார்த்து கொள்ளை அடித்து சென்ற மர்ம நபர்களின் சிசிடிவி காட்சி இணையங்களில் வைரல் ஆகி வருகிறது.

ஆலங்குளம் காமராஜ் நகரில் கிறிஸ்துமஸ் விடுமுறையில் சொந்த ஊருக்கு சென்றவர்கள் மற்றும் தேவாலயத்துக்கு சென்றவர்களின் வீடுகளில் புகுந்த கொள்ளையர்கள் பணம் மற்றும் நகைகளை திருடி சென்றுள்ளனர்.

திருடுவதற்காக வீடுகளின் அருகில் சென்று டார்ச் அடித்து பார்வையிடும் காட்சியும், காமிரா அருகில் செல்லும் போது கால்களை சாய்த்து நடந்து செல்லும் காட்சிகளும் சிசிடிவியில் பதிவாகி உள்ளது.

ஏற்கனவே இதே பகுதியில் 15 லட்சம் ரூபாய் மதிப்புடைய தங்க நகைகளை கொள்ளையடிக்கப்பட்டுள்ள நிலையில் மீண்டும் தொடர் திருட்டு அரங்கேறி உள்ளது .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments