டிவி நடிகை தற்கொலை வழக்கில் புதிய தகவல்கள்.. கடைசி நிமிடங்களில் துனிஷா, ஷீசானிடம் போனில் பேசியது என்ன.?

0 2576

தொலைக்காட்சி நடிகை துனிஷா சர்மா தற்கொலை செய்துகொண்டது தொடர்பாக புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவர் தூக்கிட்டு இறப்பதற்கு முன்பு கடைசியாக தனது காதலனான நடிகர் ஷீசான் கானுடன் பேசியதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சுமார் 7 மணி நேர தொடர் விசாரணைக்குப் பிறகு நேற்று ஷீசானை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்திய போலீசார், விசாரணைக்கு ஒத்துழைக்காததால் மேலும் 2 நாட்களுக்குப் போலீஸ் காவலை நீட்டிக்க அனுமதி பெற்றனர்.

ஷீசானிடம் இறுதி நிமிடங்களில் பேசியது என்ன என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.

காதலனுக்காக துனிஷா ஹிஜாப் அணிந்ததாகவும் அவருடைய உறவினர் ஒருவர் போலீசாருக்குத் தெரிவித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments