''இந்து கோயில்களில் நிலவும் சாதி தீண்டாமையை முறியடிக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்..'' - அமைச்சர் பி.கே.சேகர்பாபு..!

0 1565

இந்து கோயில்களில் நிலவும்  சாதி தீண்டாமையை  முறியடிக்க நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என  அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

சட்டப்பேரவையில் இந்து சமய அறநிலையத்துறை சார்பில் அறிவிக்கப்பட்ட மானிய கோரிக்கைகள், திட்டப்  பணிகள் நிலை குறித்து சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள இந்து சமய அறநிலையத்துறை ஆணையரகத்தில் சேகர்பாபு தலைமையில் அதிகாரிகளுடன் சீராய்வு கூட்டம் நடைபெற்றது.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர்,  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு பெரும் அளவில் கூட்டம் வரக் கூடிய  கோயில்களில் போதிய பாதுகாப்பு மற்றும் தரிசனத்திற்கான ஏற்பாடு பணிகளை செய்து முத்திரை பதிப்போம் என்றார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments