அமெரிக்காவில் மலைப்பகுதியில் பனிப்பொழிவுக்கு மத்தியில் சிக்கித் தவித்த நாயை பத்திரமாக மீட்ட மீட்புக்குழுவினர்.!

0 1815

அமெரிக்காவின் யூட்டா மலைப்பகுதியில் பனிப்பொழிவுக்கு மத்தியில் சிக்கித் தவித்த நாயை மீட்புக் குழுவினர் பத்திரமாக மீட்டனர்.

நாலா என்று பெயரிடப்பட்ட அந்த நாய், கிறிஸ்துமஸ் தினத்தன்று கேன்யன் நீர்வீழ்ச்சி அருகே நடைபயணம் மேற்கொண்டிருந்த போது உரிமையாளரிடம் இருந்து வழி தவறிச் சென்றது.

அந்த நாய், ஒரு மலைக்குன்றின் விளிம்பில் ஆபத்தான நிலையில் நின்றிருந்ததை ட்ரோன் கேமரா மூலம் போலீசார் கண்டறிந்தனர்.

பின்னர் மீட்புக்குழுவினரை அனுப்பி சிறு காயங்களுடன் இருந்த நாயை மீட்ட போலீசார், அதன் உரிமையாளரிடம் ஒப்படைத்தனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments