நள்ளிரவில் வாகன சோதனையில் துப்பாக்கியை காட்டி காரில் இருந்தவர்களை மிரட்டிய உதவி ஆய்வாளர்..!

0 2582

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் வாகன சோதனையின்போது நிற்காமல் சென்ற காரில் இருந்தவர்களை காவல் உதவி ஆய்வாளர் ஒருவர் கைத்துப்பாக்கியை காட்டி மிரட்டும் வீடியோ காட்சிகள் வெளியாகி உள்ளன.

மீர்சவுக் காவல்நிலையத்தில் காவல்துணை ஆய்வாளராக பணியாற்றி வரும் ஜாபர் என்பவர் கடந்த ஞாயிறன்று இரவு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது ஓப்பன் டாப் கார் ஒன்றில் 5 பேர் அந்த வழியாக வந்த போது ஜாபர் அதனை நிறுத்த முயற்சித்துள்ளார்.

ஆனால் கார் நிற்காமல் தள்ளி போய் நின்றதால் ஆத்திரம் அடைந்த ஜாபர் இடுப்பிலிருந்து ரிவால்வரை எடுத்து மிரட்டி அனைவரையும் கீழே இறங்கச் செய்தார்.

தொடர்ந்து கார் முழுவதையும் சோதனை செய்த பின்னர் அவர்களை அங்கிருந்து ஜாபர் அனுப்பி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments